அசுரர் என்பது காரணப் பெயரே.
சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன்
என்றால் மது அருந்தாதவர்கள்.
ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும்,
நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத்
திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன.
இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும்,
பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள்
பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும்,
கழுவேற்றியும் அழித்தனர்.
அசுரர் என்பவர் வலிமை மிக்க,
கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட
நாகரிகம் மிக்க தமிழர்களையே குறிக்கிறது.
அது தவறாகக் கொள்ளப்பட்டு,
மக்களை நம்பவைத்துள்ளனர்.
இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும்
இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.
இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய
ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன்.
நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர
மரணம் அடைந்தார்கள்.
கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள்
தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள், பயங்கரவாதிகள் என்று சொல்வது போல, அன்று ஆரியர்கள் தமிழின விடுதலைக்காக
போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறுக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று
தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான
பற்களும் முளைத்து விட்டன.
ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்..! சிங்களப் படைகள்
யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா,? நிச்சயமாகக்
கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி
கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று
ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது.
எமது தமிழ்மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அவர்கள் அரக்கர்கள் ஆகி
விட்டார்கள்.
இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலை வீரனின்
நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாக தீபாவளி என்று இன்று கொண்டாடுகிறோம். ஆரியர்கள் தமிழினத்தை
வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையே கொண்டாடவும் வைத்து
விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்.
நன்றி: ராவணன் தமிழன்
No comments:
Post a Comment