Tuesday, 10 November 2015

ஆரிய-பார்ப்பனர்களின் பூர்வீகம் எது.?




மரபியல் ரீதியாக நடைபெற்ற ஆய்வுகளை முதலில் காண்போம்.


2001 ஆம் ஆண்டு, M.J BAMSHAD மற்றும் Dr.SPENCER WELLS (Director of the Genographic Project) ஆகிய மரபணு அறிஞர்கள் தலைமையிலான அமெரிக்க மற்றும் இந்திய விஞ்ஞானிகள் குழு, ஆரியர்களின் பூர்வீகத்தை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குழுவில் TOOMAS KIVISILD என்பவரும் ஒருவர். இவர் தான் 1999 இல் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டு ஆரிய படையெடுப்பு பொய் என்று வாதிட்டவர். இவர் நடத்திய  மரபணு சோதனைகளில் MATERNAL GENETIC எனப்படும் தாய்வழி GENOTYPE களை மட்டும் வைத்து ஆய்வு செய்திருந்தார். PATERNAM GENETIC எனப்படும் தந்தைவழி ஜீன்களை ஏனோ அப்பொழுது கருத்தில் அவர் கொள்ளவில்லை. அதன் பிறகு நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளில் TOOMAS KIVISILD உள்பட அனைத்து அறிஞர்களும் ஏகோபித்து முடிவுகளை அறிவித்தனர்.


இந்த மரபணு சோதனையில் MATERNAL GENETIC எனப்படும் தாய்வழி மரபுரிமைக்கு மட்டும் பயன்படும் MITOCHONDRIAL DNA எனப்படும் DNAவை வைத்து FEMALE INHERITANCE னப்படும் பெண்களின் தலைமுறை பற்றியும், ஆண்களை நிர்ணயிக்கும் Y-CHROMOSOME எனப்படும் DNAவை வைத்து ஆண்களின் தலைமுறை MALE INHERITANCE பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. Y-CHROMOSOME இன் NON-RECOMBINING பகுதிகள் மூலமாக M17 என்ற GENETIC MARKER-ஐ வைத்து இந்தியாவினுள்  ஆரியர் நுழைந்ததை உறுதி செய்தனர். M17 என்பது ஆரியர்களின் மரபணு அடையாளக் குறியாகும். 


இவர்களது ஆய்வு முடிவுகள்:

"இந்திய மேல்சாதிக்காரர்கள் (பார்ப்பனர்கள்-ஆரியர்கள்), மரபணு ரீதியாக WEST EURESIA என அழைக்கப்படக்கூடிய பகுதியை சேர்ந்தவர்களை (ஈரான் இந்த பகுதியில் தான் உள்ளது) ஒத்து உள்ளனர். கீழ் சாதிக்காரர்கள் (திராவிடர்கள்) மரபணு ரிதியாக ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்களை ஒத்து உள்ளனர். இந்தியாவில் உள்ள உயர்சாதியினருக்கு மரபணுவை கொடுத்தவர்கள் ஆரியர்கள். அதாவது ஆரியர்களின் சந்ததியினரே இங்குள்ள உயர்ஜாதியினர்..!” என கூறும் மரபியல் அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரை, இங்கே; 

2003 இல், QUINTANA-MURCI என்ற மற்றொரு மரபியல் அறிஞரும், இதே போல, ஆடுமாடுகளை மேய்த்த நாடோடி இடையர்கள், மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்ததை குறிப்பிட்டுள்ளார். 


பாசு (Basu et al) என்ற ஜீனோம் அறிஞர் பல ஜீனோமிக் ஆய்வு முடிவுகளை முன் வைக்கிறார்;

1. இந்திய ஆரிய பெண்களுடைய மரபுவழியில், அடிப்படையான சில ஒற்றுமைகள் உள்ளது. இது ஆரம்பத்தில் இந்தியாவிற்கு வந்த பெண்கள் குறைவு என்பதையே காட்டுகிறது.

2. பழங்குடி இனத்தவருக்கும் மற்றும் ஜாதிவாரி மக்களுக்கும் இடையே மிக பெரிய வேற்றுமை உள்ளது.

3. Austro-Asiatic எனப்படும் பழங்குடியினர் இந்தியாவில் குடியேறிய முதல் பழங்குடியினர் ஆவர்.

4. இந்தோ ஐரோப்பிய நாடோடி கூட்டங்கள் வருவதற்கு முன்னரே திராவிட பழங்குடியினர் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கி இருந்தனர்.

5. உயர்ஜாதி மக்கள் மரபியல் தொடர்புகள் மத்திய ஆசிய மக்களை ஒத்து உள்ளது.

கோர்டாக்ஸ் என்ற மரபியல் அறிஞர் ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்து இந்திய ஜாதி அமைப்புகளில் உள்ள தந்தைவழி மரபுவளிகள் 3500 வருடங்களுக்கு முன்பு மத்திய ஆசியாவிலிருந்து இடம்பெயர்ந்த ஆரியர்களை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார். 





இந்தியா மற்றும் ஐரோப்பியர்களின் ஆய்வு நூல்கள்.



இந்தோ – ஐரோப்பியர்களின் சமூக, அரசியல் அமைப்பு குறித்த ஆய்வானது ஆய்வாளர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியிலிருந்து வந்த இந்தோ-ஆரியர்கள் அல்லது வேதகால ஆரியர்கள் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் குடிபெயர்ந்தார்கள். மேய்ச்சல் நில நாடோடி வாழ்க்கை, புராதன விவசாயம், விலங்குகளையும், காலநடைகளையும் உயிர்பலி தரும் நடைமுறை உள்ளிட்ட சமய நம்பிக்கைகள், சடங்குகள் என இந்தோ-ஐரோப்பியர்களது பல்வேறு பண்புகளை அவர்கள் தங்களுடன் இந்தியாவிற்குள் கொண்டு வந்தார்கள்.

இது பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன.

  • அய்.எம்.டயாக்னோவ், இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்களின் உண்மையான பிறப்பிடம் குறித்து, ஜெர்னல் ஆப் இந்தோ-ஐரோப்பியன் ஸ்டடீஸ், XIII (1985). பக்கம் 92-174;
  • காலின் ரென்ப்ரீ, தொல்லியலும், மொழியும்: இந்தோ – ஐரோப்பியர்களின் தோற்றுவாய் குறித்த புதிர், பெங்குவின், ஹர்மான்ட்ஸ்வொர்த், 1989;
  • ஜே.பி.மல்லோரி. இந்தோ – ஐரோப்பியரின் மொழி, தொல்லியல், தொன்மம் ஆகியவற்றைத் தேடி, தேம்ஸ் & ஹட்சன், லண்டன், 1991;
  • ஏ.ஹெச்.டேனி, வி.எம்.மேஷன். (தொகுப்பாசிரியர்கள்) மத்திய ஆசிய நாகரீகங்களின் வரலாறு-1, யுனெஸ்கோ வெளியீடு, பாரீஸ், 1992;
  • ரொமிலா தாப்பர், ஆரிய இனம், அதன் அரசியல் குறித்த கோட்பாடு, ட்ரேன்ஸ் எக்சன்ஸ் ஆப் இண்டர்நேசனல் கான்பிரன்ஸ் ஆப் ஈஸ்டர்ன் ஸ்டடீஸ் XI, (1995)  பக்கம் 41-66;
  • ஜார்ஜ் எட்டோஷி, (தொகுப்பாசிரியர்) பண்டைய தென்னாசியாவின் இந்தோ-ஆரியர்கள், முன்சிராம் மனோகர்லால், தில்லி, 1997;
  • தாமஸ் ஆர்.டிராட்மேன், ஆரியர்களும், பிரிட்டீஸ் இந்தியாவும், விஸ்தார் பப்ளிகேஷன்ஸ், தில்லி, 1997;
  • ஆர்.எஸ்.சர்மா, ஆரியர்களை எதிர்நோக்கி, ஓரியண்ட் லாங்மேன், சென்னை 1994;
  • ஆரியர்களின் இந்திய வருகை, மனோகர், தில்லி, 1999; ராஜேஷ் கோச்சார், வேதகால மக்கள்: வரலாறும், நிலவியலும், ஓரியண்ட் லாங்மேன், தில்லி, 1999.




ஆடம் ஹார்ட் டேவிஸ் [Adam Hart-Davis] என்று வரலாற்றாசிரியர், History: The Definitive Visual Guide என்ற ஒரு ஆய்வு நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் ஆப்பிரிக்க, அமெரிக்க, ஆஸ்திரேலிய, இந்திய பூர்வகுடிகள் அடிமைப்படுத்தப்பட்டது குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளார். ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தது குறித்து கூறுகிற பொழுது; “The origin of (Hindu) religion can be traced to about 1500 BCE when it is believed that Aryan horseman invaded from central Asia, the indus valley, in Northern India accompanied by creator god Indra and a pantheon of lesser deities. These were the vedic gods who feature in Vedas, the 3000 years old scaret texts, that are central to the development of Hinduism.” The religion evolved to focus on senior deity called Brahma, Vishnu creator and Shiva the destroyer along with their consorts or sakthis From 6th century BCE Brahminism become the dominant form of Hinduism and triggered the composition of Brahminic epic, and puranic literature including the great texts of Mahabharata and Ramayana..!
“இன்றைக்கு இந்து மதமென்று சொல்லப்படுகிற ஆரிய மதம் கிமு1500 க்கு முன்னால் மத்திய ஆசியாவிலிருந்து கைபர் போலன் கணவாய் வழியாக படையெடுத்து வந்த ஆரியர்கள் கொண்டு வந்ததாகும். அவர்கள் இந்திரன் என்ற முதன்மைக் கடவுள், பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் (சிவன்) போன்ற உபக்கடவுள்கள்கள், அவர்களின் பெண்பாற் கடவுள்கள்கள் அடக்கிய பல்வேறுபட்ட கடவுளர்களையும் வடஇந்தியாவிற்குள் கொண்டு வந்து குடியேற்றினார்கள். சுமார் 3000 ஆண்டுகள் முற்பட்ட வேதங்களையும் கொண்டு வந்த அவர்கள் அதன் மூலம் இங்கே பிராமணியத்தை ஸ்தாபித்தார்கள். மகாபாரதம், ராமாயணம் போன்ற மத நூல்களை உருவாக்கினார்கள்..!”



”முன்னாள் சோவியத் ரஷ்யாவின் மத்திய ஆசியப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பல தொல்லியல் கலாச்சார ஆதாரங்கள் உயிர்ப்பலி, ஈமச்சடங்குகள், குடியிருப்பு மாதிரிகள், பொருளாதார நடவடிக்கைகள் போன்ற விசயங்களில் விரிவான அளவில் வேத, அவெஸ்தன் கலாச்சார ஆதாரங்களோடு ஒத்துப் போகிறது.!” என்றும் “சோம பானம் என்னும் மதுவின் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவெஸ்தன் மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது..!" என்றும் இந்திய வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ்.சர்மா, தன்னுடைய Looking for the Aryans, (ஓரியண்ட் லாங்மேன், சென்னை 1994. பக்கம் 64.) என்ற நூலில் விவரித்துள்ளார்.

"ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது, அவர்களது செய்யுள்களான அவெஸ்தாவிலும்   (Avesta Scriptures) ஆரியர்களின் ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது." என்கிறார் எ.வ. தோம்ப்சன் தனது 'இந்தியாவின் வரலாறு' என்ற புத்தகத்தில் (E.W.Thompson - History of India)

டேவிட் பிரௌலே(David Frawley), The Myth of the Aryan Invasion of India' என்ற தனது புத்தகத்தில் 'ஆஸ்கோ பர்பொலோ’ என்ற வரலாற்று ஆய்வாளர், ‘வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்கள் இந்தியாவில் நடை பெற்ற யுத்தங்களே அல்ல..அவை ஆப்கானிஸ்தானில் இரு வேறு இந்திய - ஈரானிய இனக்குழுக்களுக்குள் நடந்தவையாகும்..!’ என்று கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடக்கக்கால ஆரியர்கள் அரை நாடோடிக் கூட்டமாகவே இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். கால்நடை வளர்ப்பு முக்கிய இடம் பெற்றிருந்த மேய்ச்சல் பொருளாதார வாழ்க்கையே பிரதானமாகவும், விவசாயம் இரண்டாம் நிலையிலும் இருந்தது. அவெஸ்தாவையும் வேத இலக்கியத் தொகுப்பையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் இந்த முடிவுக்கு வர முடியும். அவெஸ்தா என்பது ஜொராஸ்டர் என்ற சமய ஞானியின் போதனை தொகுப்பு நூல். வரலாற்றுக் காலத்திற்கு முன்பு தோன்றிய ஜொராஸ்திரிய சமயம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை பண்டைய பாரசீகத்தின் (இன்றைய ஈரான்) அரசாங்க சமயமாக விளங்கி வந்தது. இஸ்லாமிய சமயத்தின் வளர்ச்சியினால் அப்பகுதியிலிருந்து முற்றாக அழிந்துப்போன அந்த சமயம் இன்று இந்தியாவில் பார்சிகளின் சமயமாக சுருங்கி போனது.

சர்.வில்லியம் ஜோன்ஸ் Sir William Jones British orientalist and jurist கல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தவர். இவர் ஐரோப்பிய மொழிகள், ஈரானிய மொழிகள், இந்திய மொழிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு அவைகளை வகைப்படுத்தினார். அதன்படி பாரசீக மொழியும் சமஸ்கிருதமும் ஐரோப்பிய மொழி குடும்பத்தை சார்ந்தது எனக் கண்டறிந்தார். அதோடு அவை அதன் உட்பிரிவான இந்தோ-இரானிய மொழிக் குடும்பத்தை சார்ந்தவை என்றும் கண்டறிந்தார். ஒரே மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியான பாரசீக மொழியை ஆராய்கிற பொழுது ஆரியரின் நாகரிகத்தினைப் பற்றியும் பூர்வீகத்தைப் பற்றியும் பல சுவையான வரலாற்று செய்திகளை அறிந்துக் கொள்ள முடிகிறது. 

ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியிலிருந்து வந்த இந்தோ-ஆரியர்கள் அல்லது வேதகால ஆரியர்களின் ஒரு குழுவினர் சிரியா நாட்டைச் சேர்ந்த மித்தனி (Mittani) வந்து, அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவிற்குள் நுழையுமுன் சில காலம் ஈரானை சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள். அதன்பின் இந்தியாவிற்குள் நுழைந்த அவர்கள் பாரசீக மத நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள். எனவே பாரசீக மொழியிலுள்ள கடவுள் பெயர்களை, சொற்களை இந்துமத வேதங்களில் பரவலாக காண முடியும்.

பாஜகவை சேர்ந்த நேரு குடும்பத்து பெண்ணான மேனகாகாந்தி, பேராசிரியர் ஓசைர் ஹுசைன் என்பவருடன் இணைந்து “MUSLIM-PARSI-NAMES” என்ற அகராதி நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்த நூலில் இந்து மத வேதங்களிலுள்ள ஒவ்வொரு சொல்லிற்கும், சொல் பெறப்பட்ட மொழிகள் ARABIC, AVESTAN, HINDUSTANI, HEBEW, PERSIAN, PAZAND, PHALAVI, SYRIAN, TURKISH (அரபி, அவெஸ்தன், ஹிந்துஸ்தானி, ஹிப்ரு, பாரசீகம், பாலவி, பசந்த், துருக்கி மற்றும் சிரியன்) குறித்து விவரங்கள் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்பட்ட மதம், அரசியல், குறித்த பாரசீக சொற்களை தொகுத்து கீழே உள்ளவாறு விவரிக்கப்படுகிறது   



மேனகா காந்தி தொகுத்த நூலிலிருந்து சில பகுதிகள்..
 
1. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருமுன் சில காலம் பாரசீகத்தில் தங்கி இருந்துவிட்டு பின்னர்தான் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். இது சுமார் கி.மு.1500இல் நடந்தது. இதன்பின் இஸ்லாமிய மதம் தோன்றி இந்தியாவுக்கு கி.பி.800இல் பரவியது. பாரசீக நாட்டிலிருந்து கஜினி முகம்மது (1012) படையெடுத்து வந்தார். இறுதியாக தில்லியில் டில்லியில் சுல்தான்கள் ஆட்சி (கி.பி.1206-_1526) நடைபெற்றது. பின்னர் முகலாயர் ஆட்சி 1857 வரை நடந்தது. முகலாயர் ஆட்சிக் காலத்தில் பாரசீகர்கள் பெருமளவில் இந்தியாவிற்குள் வந்தனர். முகல் என்ற சொல்லே பாரசீக சொல் ஆகும். இது மங்கோலியரை குறிக்கும். பாரசீக மொழியின் தொடர்பு இந்திய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.

2. பாரசீகரின் மத நம்பிக்கைகளும், ஆரியரின் மத நம்பிக்கைகளும் பெருமளவில் ஒற்றுமை உடையவை. உதாரணம், ஈரானியரின் தொண்மையான மொழியான அவெஸ்தாவிற்கும் ரிக் வேதத்திற்கும் மிகவும் ஒற்றுமை உள்ளது.

3. வேத கால கடவுள்களான இந்திரன், வருணன், வாயு, மித்திரன் போன்றோர்களும், ரிஷிகளான வஷிஷ்டா, அகஸ்தியர், மரூத் போன்றவர்களும் பாரசீக மொழியில் இடம் பெற்றுள்ளனர்.

4. ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட, கி.மு.1600ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டுகளிலும், கி.மு.1400ஆம் ஆண்டைச் சேர்ந்த மித்தாணி கல்வெட்டுகளிலும் காணப்படும் பெயர்களும், வேதகால கடவுள்கள் பெயரும் ஒத்துப் போகின்றன.

5. ஆரியர்கள், யாகங்கள் செய்தனர். தீயை வணங்கினர். பசுவை வணங்கினர். குதிரையை வணங்கினர். காமதேனு போன்ற மனித உருவம் + மிருகம் + இறக்கை உடைய பறவை உருவம் ஒன்றாக அமைந்த உருவங்களைப் பற்றிய சொல், தீயைப்பற்றி பல சொற்கள், யாகங்களைகுறித்த பல  சொற்கள் பாரசீக மொழியில் காணப்படுகின்றன.

6. இராமன், ஆரியன், ராணா, ராணி, இந்திரன், வருணன், இரான், சாமி (கடவுள்), ரங்கா ராகவன், ரகு, பீஹார், (Daeva) தேவா, மணி (கடவுள்), கந்தர்வா, கயா, லஷ்கரி, ஜலம், மன்னன், மந்த்ரம், மாரி(கடவுள்), கௌ போன்ற சொற்கள் பாரசீக மொழியில் இடம்பெற்று, அதற்குரிய விளக்கங்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன.

7. பஞ்சாங்கம் என்ற ஆண்டுகாட்டியில் உள்ள அங்கம் என்பது பாரசீக சொல்லாகும். இதன் பொருள், காலம், பருவம் (Time) (Season) ஆகும். பஞ்ச என்ற சொல், ஐந்து வகை ஆண்டு கணக்கீட்டு முறையைக் குறிக்கின்றது. பாரசீகத்தின் அன்பளிப்பு பஞ்சாங்கமாகும். இந்த பஞ்சாங்கத்தை வைத்து நாள் குறிப்பது. பூணூல் அணிந்த ஆரியர்களின் வேலை ஆகும்.

8. Gowpathi Sha = (கௌபதி+ஷா) = கௌபதி + ஷா = பசுபதி + மன்னன் (அ) அரசன். இந்த Pathi என்ற சொல் நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் என்ற பெயர் போன்றது.

9. Hom (ஓம்) என்ற சொல்லுக்கு, பாரசீக மொழியில்-யாக சடங்குகளில் பயன்படுத்தும் சாறு என்பதனை குறிக்கின்றது. இது சோமபானம் போன்றது.

10. Jal (ஜலம்) என்ற பாரசீக சொல்லுக்கு தண்ணீர் என்று பொருள். இன்று கூட ஆரியர்கள், தமிழர் திருமணங்களில் ஜலம் விடுங்கள் என்கிறார்கள்.

11. பாரசீக மொழியில் ஈரான் நாட்டினைக் குறிக்கும் சொல் Airan. இந்த பாரசீக சொல்லுக்குப் பொருள் ஈரான் ஆகும். இந்த நாட்டை ஆரியர்களின் தாயகமாக இந்த பாரசீக அகராதியில் கூறப்பட்டிருக்கிறது. இது ஆரியர்கள் பாரசீகம் வழியாக இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதனை உறுதிப்படுத்துகின்றது.

12. பாரசீக மொழி அகராதியில் ஆரியர்களின் மூதாதையர் பிறந்த நாடாக துர்கிஸ்தான் (Turkistan) அய் குறிப்பிடுகின்றது. ஆரிய இனம் தோன்றிய பகுதியின் பெயர் “Airyana Vaeja”. இது துர்கிஸ்தான் நாட்டில் புல்வெளிகள் நிறைந்த பகுதியில், வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குதான் மேய்ச்சல் நாகரிகம் என்று அழைக்கப்படுகின்ற Stepi Culture என்று வரலாறு கூறுகின்ற நாகரிகம் தொடங்கியது. இந்த “Airyana Vaeja” என்ற இடம் பாரசீக மொழியில், நிணீஹ்ணீ/கயா வழங்கப்படுகின்றது. இந்த கயா என்ற சொல் அவெஸ்தான் மொழியில் முதலில் தோன்றியது.

13. துர்கிஸ்தானில் உள்ள கயா என்ற ஊரைப் போல பீகார் மாநிலத்தில் கங்கைக்கரையில் புத்தகயா உள்ளது. இது தென்னிந்திய ஆரியர்களுக்கு புனிதத் தலமாகும். இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறந்தது என்று ஆரிய சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது ஆரியர்கள் துர்க்கிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.

14. உருது என்ற பாரசீக சொல்லுக்கு படை, முகாம் (Camp) படைவீடு, சந்தை (மார்க்கெட்) என்று பொருள். இதன் அடிப்படையில் முகலாயர் ஹுமாயுன் காலத்தில் படைவீரர்கள் சந்தையில் கூடி பேசிய மொழியே பிற்காலத்தில் இந்தி என்றும் உருது என்றும் அழைக்கப்பட்டன. இந்த மொழிகள் ஆரம்பத்தில் Campu Language என்று அழைக்கப்பட்டன.

15. பாரசீகமொழியில், இந்தியாவில் வாசிக்கப்படும, தம்புரா, வீண்(ணா), வாத்ய (வாத்யம்) என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. வாத்யம் என்ற சொல் அவஸ்தன் நூலில் உள்ளது.

16. வீர் (Vir) என்ற சொல் பாரசீக மொழியில் உள்ளது. இந்த சொல்லே வடமொழியில் வீர்பூமி, பரம் வீர் சக்ரா போன்ற சொற்களில் உருப்பெற்றுள்ளது.

இவைத் தவிர டி.என்.ஜா எழுதிய ‘THE MYTH OF THE HOLY COW எனும் நூல் வெ.கோவிந்தசாமி அவர்களால் ‘பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்’ எனும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதிலும் ஆரியருக்கும் ஈரானியர்களுக்குமுள்ள ஒற்றுமை விவரிக்கப்பட்டிருக்கிறது.  

        

பசுவை குறிக்கும் கோ(GAU) என்ற சொல் பல்வேறு பொருள்களில் 176முறை ரிக்வேத சுலோகங்களில் வருகிறது. கால்நடைகள் தொடர்பான சொற்கள்  700முறையாவது அந்த நூலில் இடம்பெற்றிருக்கக் கூடும். தொடக்கக்கால ஆரியர்கள் மத்தியில் கால்நடைகள் மிக மதிப்பான செல்வமாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய சொத்தாகவும் இருந்திருக்கிறது. வளமான மனிதன் கோமத் என்றும், பழங்குடி இனத்தலைவன் கோபா அல்லது கோபதி என்றும் அழைக்கப்பட்டார்கள். கால்நடைகளைப் பெருக்க ஏராளமான வழிப்பாட்டுப் பாடல்கள் ரிக்வேதத்தில் காணப்படுகிறது. இந்த வழிப்பாட்டுப் பாடல்கள் அடிக்கடி பழங்குடி இனங்களுக்கிடையே போர் ஏற்படக் காரணமாய் இருந்தன. இம்மாதிரியான சண்டைகளைக் குறிக்க இந்த நூலில் பயன்படுத்தப் பட்டுள்ள கவிஸ்தி, காவ்யு, கவேஸ்னா, போன்ற சொற்களிலிருந்து உருவானவைதாம். உறவுமுறைகளை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சில சொற்கள் மேய்ச்சல் நில வாழ்க்கை காலக்கட்டத்தைச் சேர்ந்த சொற்களிலிருந்து பிறந்தவையாகும். துகித்ர (DUHITR) என்று மகள் அழைக்கப்பட்டாள். (DUTITA=பால் கறப்பவர்.). பசுக்களுக்குப் பிறந்த சிலவகைத் தெய்வங்கள் (கோஜாதா) தேவலோகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தங்களது இந்தோ-ஐரோப்பிய முன்னோர்களிடமிருந்து ஆரியர்கள் மரபுரிமையாகப் பெற்ற மேய்ச்சல் நிலப் பொருளாதார வாழ்க்கையையே இவையனைத்தும் வெளிப்படுத்துகின்றன. சமய-சடங்குகளில் முக்கியமாக விலங்குகளை உயிர்ப்பலி தரும் சடங்குகளிலும், உணவுப் பழக்கவழக்கங்களிலும்- இந்த அம்சங்கள் பிரதானமாகத் தெரிகின்றன.

மேய்ச்சல் தொழிலைப் போலவே, விலங்குகள் அல்லது கால்நடைகளை உயிர்ப்பலி தரும் சடங்குகளும் தொடக்கக்கால ஆரியர்களால் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டு மிகப்பரவலாக நடைமுறையில் இருந்திருக்கிறது. கால்நடைகளை உயிர்ப்பலி தரும் பசுபந்தா (PASUBANDHA) என்ற வேதக்காலச் சடங்கின் மூலக்கூறுகளை மொழியியல், தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில் கிழக்கு ஐரோப்பாவின் தொடக்ககால ஸ்டெப்பி புல்வெளிக் கலாச்சாரங்களில் காணமுடியும். நமக்கு பக்கத்திலுள்ள ஈரானில் (இந்த வழியாகத்தான் இந்தோ-ஐரோப்பியர்களின் கிழக்குப் பிரிவினர் இந்தியாவிற்குள் நுழைந்தனர்.) பண்டைக் காலத்தில் விலங்குகள் உயிர்ப்பலி தரப்பட்டதற்கு அவெஸ்தாவில் தெளிவான ஆதாரங்களைப் பார்க்கலாம். வேதகாலச் சொல்லான யக்ஞம் (வேள்வி) அவெஸ்தாவில் யஸ்னம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கால்நடைகள், குதிரைகள், ஆடுகள், பன்றிகள் ஆகியன உயிர்ப்பலி தரப்பட்ட செய்திகளை வேத இலக்கியங்கள் அடிக்கடி குறிப்பிடுவது போலவே அவெஸ்தாவும் 100 எருதுகள், 1000 கன்றுகள், 100 குதிரைகள்,  10,000 ஆடுகள்,  1000 ஒட்டகங்கள் பலி தரப்பட்ட செய்தியைக் கூறுகிறது.

தொடக்கக்கால ஆரியர்களுடன் சில இந்தோ-ஈரானியத் தெய்வங்களும் குடிபெயர்ந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், காலப்போக்கில் அவை தங்கள் குணங்களையும், தோற்றங்களையும் ஏதேனும் ஒரு வகையில் மாற்றிக் கொண்டன. அத் தெய்வங்களில் இந்திரன், அக்னி, சோமன் ஆகிய மூவரை முக்கியமாகக் குறிப்பிடலாம். ரிக் வேதத்தில் அதிகமான பாடல்களில் போற்றப்பட்டுள்ள இந்திரன், அவெஸ்தாவில் இரண்டே முறை குறிப்பிடப்பட்டுள்ளான். அதுவும் பேயாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறான்; தெய்வமாக அல்ல. விருத்திரகன் (விருத்திரகனை கொன்றவன்) என்ற வேதப்பட்டப் பெயரால் ரிக் வேதத்தில் எழுபது முறை இந்திரன் குரிப்பிடப்பட்டிருக்கிறான். பின்னர் இது விருத்திராக்னா என மருவியது. அவெஸ்தாவில் அடர் என்றிருந்தது இங்கு அக்னியாக மாறியது. இங்கிருந்த சோமன் அங்கு ஹவோமாவாக மாறினான். அவெஸ்திய ஈரான் தெய்வங்களுக்கும், வேதகாலத் தெய்வங்களுக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகள் குறித்து பல ஆய்வாளர்கள் விவாதித்துள்ளனர். எடுத்துக்காட்டுக்குப் பின்வரும் நூல்களை பார்க்கவும்.

ஏ.ஏ.மேக்டோனல், வேதப்புராணங்கள், ஸ்டிராஸ்பர்க், 1897, இந்திய மறுபதிப்பு, இன்டாலிஜிகல் புக்ஸ் அவுஸ், வாரணாசி, 1963.
ஏ.பி.கீத், வேதம் மற்றும் உபநிடதங்களின் சமயமும், தத்துவமும், ஹார்வார்ட் ஓரியண்டல் சீரியஸ் 31, கேம்பிரிட்ஜ், மசாசு சூஸஸ்ட்ஸ், 1925, இந்திய மறுபதிப்பு, மோதிலால் பனார ஸ்சிதாஸ்  1970,
லூசிஸ் ரெனோ, வேத இந்தியா, இந்திய மறுபதிப்பு, இன்டாலிஜிகல் புக்ஸ் அவுஸ், வாரணாசி, 1971.

சோமனின் பிறப்பு குறித்தும், அவன் குணங்கள் குறித்தும் நிலவி வரும் மாறுபாடான கருத்துக்களைக் காண ஏ.ஏ.மேக்டோனல், வேதப்புராணங்கள், ஸ்டிராஸ்பர்க், 1897, இந்திய மறுபதிப்பு, இன்டாலிஜிகல் புக்ஸ் அவுஸ், வாரணாசி, 1963. பக்கம் 102-114. சோமா தாவரத்தின் தாவிரவியல் வகைப்பாடு குறித்து முடிவுறாத, ஆனால்  உயிரோட்டமான விவாதம் நடைபெற்று வருகிறது. போதை தரும் அல்லது மயக்கம் தரும் பல்வேறு தாவரங்களை சோமா தாவரமென்று ஆய்வாளர்கள் அடையாளம் காட்டுகிறார்கள். மர்ஜியானாவில் (தென்கிழக்கு துர்க்மெனிஸ்தான்) உள்ள டோகோலாக்- 21 கோயில் வளாகத்திலுள்ள பாத்திரங்களில் காணப்படும் போதைச் செடியின் கிளைகள் சோமா தாவரக்கிளைகளாக இருக்கலாம் என்று சமீபகாலத் தொல்லியல் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. (ஆர்.எஸ்.சர்மா, ஆரியர்களை எதிர்நோக்கி, பக்கம்-51, ஹேரிபால்க், SOMA I&II, BSOAS, 52 (1989)  பக்கம் 77-90; ஜி.எர்டோஷி தொகுத்த ‘பண்டைய தென்னாசியாவைச் சேர்ந்த இந்தோ-ஆரியர்கள்’ என்ற நூலில் இடம் பெற்றுள்ள அஸ்கோ பர்போலாவின், ‘ஆரியப் பிரச்சனையும், சோமபானமும்’; ‘எழுத்து, மொழியியல், தொல்லியல் ஆதாரங்கள்’ மற்றும் ஹாரி நைபெர்க்கின், THE PROBLEM OF THE ARYANS AND SOMA; THE BOTANICAL EVIDENCE.
பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள். பக்கம் 105.  

முடிவுரை:

  1. ஆரியர்களின் மரபணு அடையாளக் குறியான M17 என்ற GENETIC MARKER-ஐ வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமாக ஆரியர் இந்தியாவினுள் நுழைந்திருப்பது உறுதியாகிறது.  
  2. கிழக்கு ஜெர்மனியின் ஸ்டெப்பி புல்வெளி கலாச்சாரத்துடனும், ஈரானிய அவெஸ்தன் கலாச்சாரத்துடனும் நிலவியல், தொல்லியல், மொழியியல் ரீதியாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளிலும் ஆரியருக்கு நெருங்கிய ஒற்றுமை இருப்பதை இந்திய ஐரோப்பிய அறிஞர்கள் ஏகமனதாக ஒப்புக் கொள்கின்றனர்.
  3. திருமதி. மேனகா காந்தி அவர்கள் தொகுத்த மொழியகராதியில் சொல்லப்பட்டுள்ள கருத்திலும், டி.என்.ஜா எழுதிய பசுவின் புனிதம் நூலில் அவர் சுட்டிக் காட்டும் அவெஸ்தன்-ஆரிய தெய்வங்களின் சடங்கு-சம்பிரதாயங்களின் இடையே நிலவும் ஒற்றுமையை கொண்டும் ஆரியர் அன்னியர் என்பதை விளங்க முடிகிறது..
  4. துர்க்மெனிஸ்தான் பகுதியில், முன்னாள் சோவியத் ரஷ்யாவின் மத்திய ஆசியப் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்ட பல தொல்லியல் கலாச்சார ஆதாரங்கள், உயிர்ப்பலி, ஈமச்சடங்குகள், குடியிருப்பு மாதிரிகள், பொருளாதார நடவடிக்கைகள் போன்ற விசயங்களில் விரிவான அளவில் வேத, அவெஸ்தன் கலாச்சார ஆதாரங்களோடு ஒத்துப் போகிறது. குறிப்பாக கனிஷ்கர் காலத்தில் கல்வெட்டுகள் 1993இல் ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டன. இதில் இரானிய மொழி, ஆரிய மொழியாகக் குறிக்கப்பட்டுள்ளது.
  5. Helena Petroun Blavatsky என்ற ஆய்வாளர், தனது “Secret Doctrine” (1888) எனும் நூலில் கீழ்க்கண்டவாறு அவரது கருத்தை தெரிவித்துள்ளார். யூதர்கள், ஆரியன் அல்லாதவர்கள் ஆபிரஹாமைச் சார்ந்தவர்கள். (ஆ+பிரஹாம்/Abraham x-brham/பிரம்மன்=பிராமணர்) ஆபிரஹாம் பிராமணனின் எதிர்பதம்.! பிராமணர் அல்லாத யூதர்களை அறவே அழிக்கும் கொள்கையை நாசி (NAZI) கொள்கை என்று கூறுவர். இந்த கொள்கை Aryanization ஆரியமயமாக்குதல் என்று பெயர். இதனால் இரண்டாம் உலகப்போர் ஹிட்லரால் நடத்தப்பட்டது.
  6. ஆரியமயமாக்கும் கொள்கையை ஜெர்மனி கடைபிடித்ததால் “The American Hertage Dictionary of English Language” என்ற அகராதியில் ஆரியர் என்பவருக்கு கீழ்கண்ட விளக்கம் தந்துள்ளது. “It is one of the ironies of History that Aryan, a word nowadays referred to the blond haired, blue eyed, physical, ideal of NAZI Germany. Originally it referred to people looked different. Its history starts with Ancient Indo Iranian People, who inhabited parts of Iran, Pakistan, Afghanistan, India, Bangladesh.”







No comments:

Post a Comment