Saturday, 28 November 2015

மசூதிகளிலும், சர்ச்சுகளிலும் தமிழில் வழிபாடு.. -மாணிக் வீரமணி





கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூவும் தமிழ் ஆர்வலர்கள் மசூதிகளிலும், சர்ச்சுகளிலும் இதை செய்ய வேண்டுமென கூவுவதில்லையே ஏன்???

பார்க்க புத்திசாலித்தனமான கேள்வியா இது தெரியும்,, ஆனா எவ்ளோ முட்டாள்தனம்னு சொல்றேன் கேளுங்க..

ஒரு கிருஸ்துவன் கிட்ட போய் யோவான் அதிகாரம் 10 வசனம் 24 ல "எட்வின் என்பவரை கட்டையால் அடிக்க வேண்டும்" என்று இருக்கிறது என்று சொன்னால் உடனே அவன் அப்படியெல்லாம் இல்லை என்று நாலு மொழிகளில் உள்ள மொழிபெயர்ப்பை கொண்டு வந்து காட்டுவான்..

ஒரு முஸ்லிமிடம் அத்தியாயம் 4 வசனம் 8 ல "அப்துல்லாஹ் என்பவரை கம்பால் அடிக்கணும்" என்று இருக்குன்னு சொன்னா அவனும் நாலு மொழிபெயர்ப்பை கொண்டு வந்து இல்லைன்னு காட்டுவான்..

ஒரு இந்துகிட்ட போய் யஜூர்வேதம் அத்தியாயம் 32 வசனம் 51ல "முருகேசன் என்பவரை அடிக்க வேண்டும் " ன்னு சொன்னா நீ என்ன செய்வ?இருக்குன்னு சொல்லுவியா? இல்லைன்னு மறுப்பியா ?
உன்னால அதை கண்டுபிடிக்க முடியுமா? முடியாது..வாய மூடிகிட்டு சும்மாதான் இருக்கணும்..

அவன் மசூதிலையும்,சர்ச்சுளையும் இங்கிலீசுல, அரபில என்ன சொல்லுரோம்னு தனியா புத்தகம் போட்டு உன்னோட மொழில குடுத்துட்டான்..இதுல இருந்துதான் நாங்க ஒதுரோம்னு..
இதே மாதிரி நீயும் அந்த பார்ப்பனன் கோவில்ல ஓதுற மந்திரத்தை எல்லாம் தமிழ்ல மொழிபெயர்த்து வெளியிட சொல்லு..அல்லது ஆங்கிலத்துலையாச்சும் வெளியிட சொல்லு..

நீ குரான் படிக்க கூடாது,பைபிள் படிக்க கூடாதுன்னு எவனும் சொல்லல..ஆனா வேதங்களை பிராமிணர் அல்லாதவன் கேட்டால் அவனோட காதுல ஈயத்தை காய்ச்சி ஊத்துன்னு சொல்றது எந்த மதம்??

இதை சொன்னா உனக்கு கோவம் வருதா?

அட அதையெல்லாம் விடுய்யா..ஏதோ ஒரு வேதத்துல இந்துக்கள் அனைவரும் "வேசி மகன்கள்"ன்னு இருக்குன்னு ஒருத்தன் சொன்னா அது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்க உன்னாலயும் என்னாலையும் முடியுமா?

தேசியகீதம் பாடுறோம்..அது வங்காள மொழி பாடல்தான்.. ஆனா அதோட அர்த்தம் எல்லா மாநிலக்காரனுக்கும் தெரியும்..அதனாலா அதை எந்த மொழில பாடுனாலும் நமக்கு ஒன்னும் பெருசா தோனல..அதே மாதிரி நீயும் செஞ்சுட்டு வந்து பேசு..

இன்னொன்னு இயேசுவும்,அல்லாவும் தமிழ்கடவுள்னு சொல்லவே இல்ல..ஆனா நாம முருகனை தமிழ் கடவுள்ன்னு சொல்றோம்..தமிழ் கடவுளுக்கு கூட தமிழில் அர்ச்சனை பண்ணுன்னு சொன்னா என்ன தப்பு??

அவன் தான் என்ன ஒதுறோம்னு எல்லோருக்கும் புரியுற மாதிரி எழுதி வச்சுட்டு வேற மொழில ஓதுறான்..ஆனா நீயும் நானும் என்ன சொல்றோம்னு தெரியாமலேயே பொலம்பிகிட்டு இருக்கோம்..

வித்தியாசம் தெரிஞ்சா உண்மை காரணம் கண்டுபிடிக்க முயற்சி செய்..

இல்லைன்னா கடைசி வரைக்கும் பார்ப்பன பண்டாரங்களுக்கு பல்லாக்கு தூக்கிட்டே திரி..

நன்றி:மாணிக் வீரமணி

No comments:

Post a Comment