“நரேந்திரமோடிக்கு எல்லாவிதமான பிராமண ஒழுக்கமும் இருக்கிறது . அதனால் அவரை எனக்குள்ள பிராமண அந்தஸ்தை வைத்து அவரை ஒரு பிராமணராக மாற்றி தரம் உயர்த்த போகிறேன் “ என சுப்பிரமணிய சுவாமி போட்ட நுண் அரசியல் தந்திரத்தைதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
அதுசரி, எப்படி ஒருவரை பிராமணராக மாற்றுவது.? அதற்காக தான் சாதி மாற்ற சடங்குகள் இருகிறதே.! அந்த சடங்கில் 101 பிராமணர்களை வைத்து யாகம் நடத்தி, அந்த யாகத்தில் பிராமணராக மாற துடிக்கும் தாழ்ந்தசாதி மனிதன் தங்கத்தால் செய்யப்பட்ட பசு உருவ சிலையின் கருவறையில் உள்ளே சென்றுபிறகு, சிறிது நேரம் கழித்து வெளியே வந்துவிட்டால், அவர் பிராமணர். இந்த சடங்குக்கு பெயர் ஹிரண்ய கர்ப்பம் அதாவது தமிழில் தங்க கருவறை. இந்த சடங்கு முடித்ததும், அந்த தங்க பசு சிலையை உருக்கி அந்த தங்கத்தை யாகம் செய்த பிராமணர்களுக்கு பங்கு பிரித்து தந்துவிட வேண்டும் .
தாழ்ந்தசாதியாக தலீத்களை நடத்தகூடாது என சமத்துவம் எண்ணம் கொண்ட பாரதியார், ஒரு தலீத் மனிதனுக்கு பூணூல் அனுவித்து பிராமணனாக தரம் உயர்த்தினார். பாரதி செய்தது சமத்துவ வேண்டிதான். இவரை போல இராமானுஜர்,அக்காலத்திலேயே ஒரு பெரும் கூட்டத்தை பிராமணர்களாக மாற்றி “திருகுலத்தார்“ என்ற அடையாத்தை உருவாக்கினார். இதுபோல இன்னும் பல வரலாற்று சம்பவங்களும் உண்டு .
வெளிப்படையாக இதை பார்போருக்கு, ஒரு தாழ்ந்தவரை உயர்வாக மாற்றும் யாகம் செய்தால் ஒரு உயர்ந்த மரியாதை கிடைத்துவிடும். இதனால் சாதிய கொடுமை இருக்காதே என்ற வெள்ளை போர்வை பறந்தாலும், போர்வைக்கு பின்னால் இருக்கும் கருநிற அழுக்கு என்னெவெனில், உலகில் “பிராமணம்“ தான் உயர்வான பிறப்பு என்ற அடையாளம், முத்திரையாக குத்தப்படுகிறது. இதனால் சாதி முறையும் சரி என அங்கீகரிக்கப் பட்டுவிடும்.
இந்த மாதிரியான கருத்தை அழுத்தமாக பதித்து, சுப்பிரமணிய சாமி, அவரின் பாஜக கட்சியில் உள்ள பிராமணர் அல்லாத தொண்டர்களை பார்த்து “நீங்கள் கவலை பட வேண்டாம், நீங்களும் ஒரு பிராமணராகலாம். அதற்கு நரேந்திர மோடி போல ஒரு அதிகாரம் படைத்த பிரதமர் பதவிக்கு வந்துவிட்டால் அல்லது ஏதாவது விஞ்ஞான கண்டுபிடிப்பை கண்டறிந்து உலக அளவில் புகழ்பெற்றுவிட்டால், உலக பணக்காரனாக நீங்கள்(தலீத்தாக இருந்தாலும்) உயர்ந்துவிட்டால், சுருங்க சொன்னால், பிராமணர்களுக்கு லாபம் கிடக்கும் வகையில் ஒருவர் நடந்து கொண்டால், அவர் எந்த சாதியாக இருந்தாலும் அவருக்கு பிராமண ஒழுக்கம் வந்துவிட்டதாக அர்த்தம் என்ற மறைமுக எண்ணத்தை பாஜக தொண்டர்களுக்கு அழுத்தமாக பதிய வைக்கிறார்.
மருத்துவர் இராமதாஸ் சொன்னது போல, ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வன்னிய பெண்களை தலீத் இளையோர்கள் மயக்குகிறார்கள் என்ற பகுத்தறிவற்ற மேம்போக்கு பார்வையாக இந்த பிராமண மோகத்தையும் ஒப்பிடலாம். ஜீன்ஸ் உடை எப்படி மிக உயர்வான நாகரீக உடையாக பார்க்கப்படுகிறதோ, அதே பார்வையை தான் சுப்பிரமணிய சுவாமி “பிராமணம்” என்ற பிறப்பே ஒரு வரம் என்ற உணர்வை உளவியல் ரீதியில் திணிக்கிறார்.
நிஜத்தில் ஜீன்ஸ் சுரங்க தொழிலாளர்கள் பயன்படுத்திய உடை என்பதும், பிராமணம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் அவர்களின் லாபத்துக்காக உருவாக்கிய மாயை என்ற உண்மையை அறியாத பாஜக தொண்டர்கள், இவர்களின் பிறப்பை ஜாதிய ரீதியில் ஒரு வட்டமிட்டு, பிராமணர்களை விட இவர்களை தாழ்வானவர்கள் என்ற அடிமை உணர்வோடும், இவர்களை விட தலீத்கள் தாழ்வானவர்கள் என்ற மந்தப்புத்தி உணர்வோடு இருப்போருக்கு சுப்பிரமணியசாமி செய்கிற பிராமண அரசியல் இவர்களுக்கு எப்போதும் புரியாது.
மனித பிறப்பை விஞ்ஞான ரீதயில் பார்க்க தவறி, உலக இயல்பை அறியாமல் ஒரு இந்துவ கிணற்று தவளையாக வாழ்ந்துவரும் பாஜக தொண்டர்களின் பார்வையில் பிராமணம் என்பது உயர்பிறப்புதான், இவர்கள் பிராமணருக்கு தொண்டு செய்து பிரமணராக மாற துடிப்போர் என நாம் எடுத்துகொள்ளலாம். அதாவது சாதி விரும்பிகள். பிறரை அடிமையாக்க துடிக்கும் கயவ புத்தி உடையவர்கள் என எடுத்துக்கொள்ளலாம்.
மனைவியின் சமையலை குறைச்சொல்விட்டு பக்கத்துவீ ட்டு சமையலை புகழும் கணவனுக்கு, அவனது மனைவி, அவள் சமைத்ததை மறைத்து பக்கத்துக்கு வீட்டில் வாங்கிவந்ததாக சொல்லி கொடுத்தாளாம். அவனும் பக்கத்துக்கு வீட்டு சமையல் ருசியோ ருசி என்றானாம். இந்த கதைதான் பிராமண அடிமையாக பாஜகவில் இருக்கும் ஆதிக்கசாதியினரின் நிலைபாடு.
நன்றி:
https://www.facebook.com/photo.php?fbid=803311549813886&set=a.104635826348132.7847.100004051444169&type=3&theater
[] [] []
No comments:
Post a Comment