மிகுந்த தாகத்துடன் வந்த மான் ஒன்று, தடாகத்தில் நீர் அருந்திக் கொண்டிருந்தது..
அப்பொழுது அங்கே வந்த புலி..
''எல்லோரும் நீர் அருந்துகிற தடாகத்தை ஏன் அசுத்தம் செய்கிறாய்..?'' என்று கோபத்துடன் கேட்டது..
"ஐயா, நான் அசுத்தம் ஒன்றும் செய்யவில்லையே..! எனக்கும் தாகம் மேலிட்டதால் நீர் அருந்திக் கொண்டு இருக்கிறேன்..!" என்று பணிவுடன் மான் சொன்னது.
புலி அந்த விளக்கத்தை ஏற்காமல், ''இல்லை..நீ இந்த தடாகத்தை அசுத்தம் செய்து விட்டாய்.. அதனால் இந்த காட்டிற்கே துரோகம் இழைத்து விட்டாய்..! ஆகவே அந்த மாபெரும் குற்றம் புரிந்த உனக்கு சட்டப்படி மரண தண்டனை விதிக்கிறேன்..!"
-என்று கூறி விட்டு..அதனை அடித்துக் கொன்று தின்றது.
No comments:
Post a Comment