Pages

Saturday, 20 February 2016

2002 குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை நிகழ்த்தியது பா.ஜ.க – படேல் இன தலைவர்கள்




Sunday, February 21st, 2016 5:59 AM Wafiq Sha


குஜராத்தில் பா.ஜ.க விற்கும் படேல் சமூகத்தினருக்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டு வருகின்றது. குஜராத் பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர்களான படேல் சமூகத்தின் தலைவர்கள் பலர் பா.ஜ.க விற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படித்தார் சமிதி என்கிற படேல் இன மக்கள் அமைப்பின் தலைவரான ராகுல் தேசாய் மற்றும் லால்பாய் படேல் ஆகியோர் சமீபத்தில் பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பா.ஜ.க குறித்து ராகுல் தேசாய் கூறியதாவது, “பா.ஜ.க அடிப்படையிலேயே ஒரு மதவாத கட்சி. அது முஸ்லிம்கள் மீதான அச்சத்தினை மக்கள் மத்தியில் பல ஆண்டுகளாக விதைத்து வருகின்றது” என்று கூறியுள்ளார். மேலும் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை குறித்து கூறிய அவர் “2002 இல் கோத்ரா ரயில் எரிப்பு மட்டும் நிகழ்ந்திராவிட்டால் மோடி குஜாத்தில் முதல்வராக தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கவே மாட்டார்” என்று கூறியுள்ளார்.

“இந்துக்கள் மனதில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இல்லையென்றால் முஸ்லிம்கள் நம்மை கொன்று விடுவார்கள் என்ற என்னத்தை விதைக்க அவர்கள் அதனை செய்தார்கள்” என்று தேசாய் கூறியுள்ளார். மேலும், “அந்த ரயிலை (சபர்மதி எக்ஸ்பிரஸ் ஐ) எரித்தவர்கள் முஸ்லீம்களா இல்லையா என்று எனக்கு தெரியாது, ஆனால் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஜெயிப்பதற்காக முன்கூட்டியே போடப்பட்ட திட்டம் தான் இந்த ரயில் எரிப்பு என்று எனக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.”

“மக்கள் மனதில் மதவாத சிந்தனைகள் விதைக்கப்பட்டு விட்டால் அதை அகற்றுவது மிகக்கடினம் என்று கூறிய அவர் “பா.ஜ.கவின் பிரச்சாரத்தினால் நாங்கள் அனைவரும் மதவாத சிந்தனைகளையே சிந்திக்க பழகிவிட்டோம், தற்பொழுது நான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன்” என்று கூறியுள்ளார். “இன்றும் மக்கள் முஸ்லிம்கள் தங்களுக்கு எதிராக கலவரத்தை நடத்திவிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டு இருகின்றனர், ஆனால் உண்மையில் அவர்கள் செய்யவில்லை என்றாலும் பா.ஜ.க அதனை செய்துவிடும்” என்று கூறியுள்ளார்.

இதே போன்று படேல் சமூகத்தின் மற்றொரு தலைவரான லால்ஜிபாய் படேல் கூறுகையில் “கண்டிப்பாக கோத்ரா மற்றும் 2002 கலவரங்கள் பா.ஜ.க வினால் நடத்தப்பட்டவை. அப்போது எங்களுக்கு அது தெரியவில்லை, இப்போது தெரிகின்றது” என்று அவர் கூறியுள்ளார். ” சென்ற முறை அவர்கள் முஸ்லிம்களை குறிவைத்தனர், இந்த முறை படேல் சமூகத்தினரை துன்புறுத்துகின்றனர். இது போன்ற அரசியல் தான் நக்சல்களை உண்டாக்குகிறது” என்று கூறியுள்ளார். வருகிற தேர்தலில் படேல் சமூகத்தினர் பா.ஜ.க. வை முன்பு ஆதரித்தது போன்று ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


-------------------------------------------------------------------


2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத்தின் கோத்ரா ரயில்நிலையத்தில் ஒரு கும்பல் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலை எரித்தது. இதில் அதில் பயணம் செய்த 59 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் எரிப்பை நிகழ்த்தியதாக 31 முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த ரயில் எரிப்பை தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட மதக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டும், முஸ்லிம் பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டும் கொல்லப்பட்டனர்.


நன்றி:

http://www.puthiyavidial.com/2002-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF/


[] [] []

1 comment:

  1. முட்டாள்தனமான கதை. இந்துக்களை வெறுக்க வேண்டும் என்ற எழுதப்பட்ட பொய்கள்.

    ReplyDelete