Pages

Saturday, 20 February 2016

மாட்டுக்கறி சாப்பிடுவதும் மகிஷாசுரனை வணங்குவதும் தேசத்துரோகம். !




மாட்டுக்கறி சாப்பிடுவதும் மகிஷாசுரனை வணங்குவதும் தேசத்துரோகம் !

----------------------------------------------------------------


"டில்லி போலிஸ் இரண்டு ஆண்டுகளாகவே ஜேஎன்யு மாணவர்களை வேவு பார்த்து வந்தது. அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள், துர்க்கையை வணங்குவதற்கு பதிலாக மகிஷாசுரனை வணங்குகிறார்கள், எனவே அவர்கள் தேசத்துரோகிகள் என்று அது அறிக்கை சமர்ப்பித்துள்ளது" என்கிறது இந்து ஏடு. 


மோடி அரசின் போலிசிற்கு எதுவெல்லாம் "தேசத் துரோகங்கள்"
என்பது தெரிந்து போனதா.? இந்துமதத்தில் பல தெய்வங்களுக்கு இடமுண்டு, அது பெரிதும் நெகிழ்ச்சியுடையது என்று ஒருபுறம் சொல்லப்படுகிறது. மறுபுறம் பிராமணியவாதிகள் வணங்கும் தெய்வங்களைத்தான் சகலரும் வணங்க வேண்டும், அவற்றுக்கு மாற்றான தெய்வங்களை 
வணங்கக் கூடாது எனப்படுகிறது. இது என்ன கொடுமை? 


ஆர்எஸ்எஸ் பரிவாரம் நெகிழ்ச்சியான இந்துமதத்திற்காக நிற்பவர்கள் அல்ல, மாறாக கறாரான பிராமணிய மதத்தை நிலைநிறுத்தப் பார்ப்பவர்கள் எனும் நியாயமான குற்றச்சாட்டுக்கு இது மற்றுமொரு வலுவான ஆதாரம்.!


-தோழர் அருணன் கதிரேசன். [18.2.2016] 

நன்றி:

https://www.facebook.com/arunan.kathiresan/posts/659911967482963


[] [] [] 

No comments:

Post a Comment