Pages

Saturday, 20 February 2016

ஆம், நான் ஒரு தேசதுரோகி.! -ராஜ்தீப் சர் தேசாய் [மூத்தப் பத்திரிக்கையாளர்]





ஆம் நான் ஒரு தேசதுரோகி

ராஜ்தீப் சர்தேசாய் இந்தியாவில் பலராலும் அறியப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர். “நன் ஒரு தேச துரோகி” என்று தனது பிளாக்கில் இவர் எழுதியது பெரும் விவாதத்திற்குள்ளானது…

1990களில் நம் நாட்டின் ஆட்சியமைப்பு எப்படி இருந்தது என்றால் மத சார்பற்ற, பொய்யான மதசார்பற்ற என்கிற நிலைமை இருந்தது. ஆனால் இப்போது வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் ‘தேசப்பற்று, தேசத்துரோகம்’ என்கிற நயவஞ்சகத்தன்மையுடன் இருக்கிறது. முன்பு என்னை சமூகவளைதளங்களில் தேசதுரோகி என சொல்லும் போது நான் கோபப்பட்டேன். ஆனால் இப்போது நடக்கும் ஆட்சியில் தேசபக்தி சான்றிதழ் தாராளமாக கிடைக்கிறது. இது என்னை “நான் ஒரு தேச துரோகி” என கத்த வைக்கிறது.

ஆம் நான் ஒரு தேசதுரோகி. ஏனென்றால் நான் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 19-ன் படி பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதை நம்புகிறேன். அதில் 2 விதிமுறைகள் உள்ளது.

1) வன்முறையை தூண்டும் பேச்சு கூடாது
2) வெறுப்பு பேச்சு கூடாது என்பதே.

இதில் வெறுப்பு பேச்சு எது என்பது விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியது. உதாரணத்திற்கு ‘ராமஜென்மபூமி இயக்கம் வெளிப்படையாக ஹிந்டுராஷ்ட்டிரம் கேட்டது. இதை நாம் எப்படி பார்க்கிறோம்? சட்டத்தை மீறியதாகவா? அல்லது அல்லது சட்டத்தை மதிப்பதாகவா? அல்லது பிற சமூகத்தினரிடையே வெறுப்பை ஏற்ப்படுத்துவதாகவா.?
பஞ்சாபில் தனி காலிஸ்தான் கேட்பவர்களின் “ராஜ் கரேகா கல்சா” (Pure will rool) என்கிற வாசகம் தேசத்துரோகமா இல்லையா…?

ஆம் நான் ஒரு தேசதுரோகி

பார்லிமெண்டை தாக்குதல் நடத்தியதால் தண்டனைக்குள்ளான அப்சல் குருவுக்கு சார்பாக JNU மாணவர்களின் கோஷத்தை நான் தேச துரோகமாக பார்க்கவில்லை. ஒரு வீடியோவில் அப்சல் குருவின் தியாகத்தை பாராட்டி கத்தும் பலர் உண்மையில் மாணவர்கள்தானா…? நம்ப முடியலையே…!
இப்படி போராடுபவர்களை அரசுக்கு எதிரானவர்கள் என சொன்னார்கள். அதனால் இது மாணவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க போதுமானதா? அல்லது இவர்களெல்லாம் சுதந்திர காஷ்மீர் அனுதாபிகளா? இல்லை இவர்களை ஜிகாதிகள் என சொல்லி முத்திரைகுத்திவிடலாமா?

ஆம் நான் ஒரு தேசதுரோகி

இந்த பன்மைமுக நாட்டில் காஷ்மீர் போராட்ட மாணவனுடனும் பேச வேண்டும், வடகிழக்கு போராட்ட மாணவனுடனும் பேசவேண்டும். அவ்வாறு பேசப்படுவதை நான் நம்புகிறேன். காஸ்மீர் மாணவன் சொல்வதையும், இம்பாலில் உள்ள மாணவன் சொல்வதையும் நான் கேப்பேன். என்னைப்பொறுத்தவரையில் அந்த காஷ்மீர் மாணவனும், இம்பால் மாணவனும், புனே FTI மாணவனும், டெல்லி JNU மாணவனும் ஒன்றே.

சட்டத்தை மீறுதலையும், வன்முறையைத்தூண்டுவதையும், தீவிரவாதத்தை வளர்ப்பதையும் செய்பவர்கள் மீது நீங்கள் வழக்கு போடலாம். ஆனால் கருத்து வேறுபாடு உள்ளவர்களின் போராட்டங்களை கவனமாகத்தான் கையாள வேண்டும். கருத்து வேறுபாடும் கருத்து சுதந்திரத்திற்கு சமமானதே. கருத்து வேறுபாடுள்ளவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள்.

ஆம் நான் ஒரு தேசதுரோகி

இந்த தேசியவாதத்தில் இரட்டை நாக்குடையவர்களை நான் நம்புவதில்லை. ஏனென்றால் அப்சல் குருவை ஆதரிப்பதை தேசதுரோகம் என்றால், அப்சல் குருவுக்கு ஆதரவான கட்சியுடன் காஷ்மீரின் PDP யுடன் கூட்டணி வைப்பதையும் தேச துரோகமாக கருதலாம். PDP அப்சல் குருவின் தூக்கினை எதிர்த்தது. இப்பொழுதும் காஷ்மீரில் இருக்கும் ஒரு இளைஞன் அப்சல் குருவிற்கு இளைக்கப்பட்டது அநீதியான தண்டனை என நினைத்தால், அதை விவாதத்திர்க்குதான் உட்படுத்த வேண்டுமே தவிர அந்த இளைஞனை ஜிகாதியாக்கலாமா? அவனது கருத்து உங்களுக்கு முரண்பாடானது என்றால் ஜிகாதி என முத்திரை குத்திவிடலாமா?

மொத்த இந்தியாவும் ஜனவரி 30ஐ காந்தி இறந்த நாளாக துக்கம் அனுஷ்டிக்கும் போது, ஹிந்து மகாசபையினர் மட்டும் கோட்சேவை கொண்டாடுகிறார்கள். அப்படிஎன்றால் ஹிந்து மகா சபா தேசத்திற்கு எதிரான அமைப்பா? சாக்ஷி மகராஜ் கோட்சேவை கொண்டாடுவது தேசத்திற்கு எதிரான செயலாக ஆகாதா? அப்படியென்றால் தேசியவாதம் என்பது ஆட்சிக்கு ஆட்சி மாறுபடுமா?

ஆம் நான் ஒரு தேசதுரோகி

நான் காலையில் காயத்திரி மந்திரம் சொல்லிக்கொண்டு எழுந்திரிக்கும் போது பெருமைப்படுகிறேன் நான் ஒரு ஹிந்து என்று. நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன். ஆனால் அது பி.ஜே.பி முக்தர் நக்வியை பொறுத்தவரை அது தேச துரோக செயல். என்னை பாகிஸ்தானுக்கு அனுப்ப போதுமான செயல். இந்த நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையை நான் நம்புகிறேன். எனக்கு ரம்ஜானின் விருந்தும், கோவாவில் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கிடைக்கும் பன்றி கறியும் பிடிக்கும், தீபாவளி பலகாரங்களும் பிடிக்கும். இங்கே எதை சாப்பிட வேண்டும் என்கிற உரிமை ஒவ்வொரு மனிதனையும் சார்ந்தது. அதை விட்டுகொடுக்க நான் தயாரில்லை.

நான் ஒரு தேச துரோகி

அன்று பாரத் மாதாகி ஜே என கோஷம் போட்டுகொண்டே பெண் பத்திரிக்கயாளரை தாக்கினர் சில வழக்கறிஞர்கள். அதை காவல்துறையும் வேடிக்கை பார்த்தது. அவர்கள்தான் போலி தேச பக்தர்கள். எல்லையில் இருக்கும் இராணுவவீரனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், நான் ஓரின சேர்க்கயாளர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பேன். தூக்குத்தண்டனையை எதிர்க்கிறேன். ஜாதி வன்முறையை, மத வன்முறையை, பாலின வன்முறையை நான் எதிர்க்கிறேன். இந்த வன்முறைகளை ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டேன். உறுத்தக்கூடிய உண்மைகளை பொதுவெளியில் சொல்ல நான் அஞ்ச மாட்டேன் அது என்னை தேசதுரோகி என முத்திரை குத்தினாலும்.

நான் ஒரு தேசத்துரோகி

கடந்தவாரம் டெல்லி ஜிம்கானா விரிவுரையாளர்கள் கூட்டத்தில் நான் சொன்னது ‘பேச்சு சுதந்திரத்தில் உங்களின் எதிர் கருத்து உள்ளவர்களையும் சேர்க்க வேண்டும், அது வன்முறையை தூண்டாத வரை” என் சொன்னதற்கு ஒரு ஓய்வு பெற்ற ராணுவஅதிகாரி “நீ ஒரு தேச துரோகி, உன்னை இங்கேயே கொல்லவேண்டும்” என கத்தினார்.

அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி என்கிற கலாச்சார தேசியவாத கொள்கையை பன்முக சமூகத்தில் திணிக்க யாருக்கும் உரிமையில்லை. யாராவது என்னை தேசத்துரோகி என சொன்னால் அமெரிக்க குத்து சண்டை வீரர் ‘முகம்மது அலியை’ நினைத்துகொள்வேன். அவரையும் தேசதுரோகி என சொன்ன அரசே பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டது. இங்கிருக்கும் சிலரும் என்னிடம் அதே போல மன்னிப்பு கேட்பார்கள்.

ராஜ்தீப் சர்தேசாய்- பிளாக்கிலிருந்து
தமிழில்: இப்போது.காம்

No comments:

Post a Comment